​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காஸாவில் பள்ளி மீது இஸ்ரேல் படைகள் வான் தாக்குதல்... 14 குழந்தைகள், 9 பெண்கள் உள்பட 40 பேர் பலி

Published : Jun 07, 2024 7:34 AM

காஸாவில் பள்ளி மீது இஸ்ரேல் படைகள் வான் தாக்குதல்... 14 குழந்தைகள், 9 பெண்கள் உள்பட 40 பேர் பலி

Jun 07, 2024 7:34 AM

காஸாவில், ஐ.நா. நடத்திவரும் பள்ளியின் மீது இஸ்ரேல் படைகள் நடத்திய வான் தாக்குதலில் 14 குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்தனர், 74 பேர் காயமடைந்தனர்.

நுஸெய்ராத் அகதிகள் முகாமில் இயங்கிவரும் அந்த பள்ளிக்குள் ஹமாஸ் போராளிகள் பதுங்கியிருந்ததால், பள்ளி மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. 6,000 பாலஸ்தீனர்கள் தஞ்சமடைந்திருந்த பள்ளி மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.