​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தொடரும் கனமழையால் பெருக்கெடுத்த காட்டாற்று வெள்ளத்தால் நிரம்பி வழியும் வள்ளிமதுரை அணை

Published : Jun 07, 2024 6:43 AM

தொடரும் கனமழையால் பெருக்கெடுத்த காட்டாற்று வெள்ளத்தால் நிரம்பி வழியும் வள்ளிமதுரை அணை

Jun 07, 2024 6:43 AM

தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த சிட்லிங் சித்தேரி, அரசநத்தம், கலசப்பாடி உள்ளிட்ட மலை கிராமங்களில் தினந்தோறும் கனமழை பெய்து வருவதால், சித்தேரி காட்டாறில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மழை வெள்ளம் செந்நிறத்தில் இருகரைகளையும் மூழ்கடித்துசென்றது.

இந்த தண்ணீர் முழுவதும் சித்தேரி மலை அடிவாரத்தில் உள்ள வள்ளிமதுரை அணைக்கு செல்வதால், ஏற்கனவே அணையின் நீர்மட்டம் நான்கடி குறைவாக இருந்த நிலையில், விரைவில் அணை நிரம்பிவிடும் என்று எதிர்பார்க்கப்படுபகிறது.