​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தென்காசி சுரண்டையில் லேசான மழைக்கே ஒழுகும் அரசு பேருந்து

Published : Jun 06, 2024 3:10 PM

தென்காசி சுரண்டையில் லேசான மழைக்கே ஒழுகும் அரசு பேருந்து

Jun 06, 2024 3:10 PM

தென்காசி மாவட்டம் சுரண்டையில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் அரசு பேருந்தில் லேசான மழைக்கே பேருந்தின் உள்ளே ஒழுகியதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ள இந்த பேருந்து கழிவு செய்யப்பட்ட பேருந்துகளின் பட்டியலில் உள்ள நிலையிலும் இயக்கப்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

இதுகுறித்து கேட்டபோது, புதிய பேருந்து வந்தவுடன் இந்த பேருந்து கழிக்கப்பட உள்ளதாக புளியங்குடி பணிமனை மேலாளர் தெரிவித்தார்.