​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜெயங்கொண்டத்தில் ஒரே நாளில் 2 போலி மருத்துவர்கள் கைது

Published : Jun 06, 2024 11:21 AM

ஜெயங்கொண்டத்தில் ஒரே நாளில் 2 போலி மருத்துவர்கள் கைது

Jun 06, 2024 11:21 AM

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் ஒரே நாளில் 2 போலி மருத்துவர்களை போலீசார் கைது செய்தனர்.

கல்லாத்தூரை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் அம்பேத்கர் மற்றும், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ராமச்சந்திரன் ஆகியோர் மருத்துவம் படிக்காமல் அலோபதி மருத்துவம் பார்த்தது பெரம்பலூர் மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக பணிகள் இணை இயக்குநர் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அவர் அளித்த புகாரின் அடிப்படையில் இருவரையும் கைது செய்து, மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.