​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மக்கள் நடமாட்டமுள்ள சாலையில் கஞ்சா போதையில் இளைஞர் மீது சரமாரி தாக்குதல்

Published : Jun 06, 2024 9:06 AM

மக்கள் நடமாட்டமுள்ள சாலையில் கஞ்சா போதையில் இளைஞர் மீது சரமாரி தாக்குதல்

Jun 06, 2024 9:06 AM

காஞ்சிபுரம் திருகாளிமேட்டில் அதிவேகமாக வந்து தனது டூவீலர் மீது லேசாக உரசியபடி சென்ற காரை துரத்தி பிடித்த இளைஞரை காரிலிருந்த 5 பேர் சரமாரியாக தாக்கினர்.

மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சாலையில் வேகமாக செல்லலாமா என அந்த இளைஞர் கேட்டதாகவும், கஞ்சா போதையில் காரில் இருந்து இறங்கி வந்த 5 பேரும் இரும்பு ராடால் அந்த இளைஞரை தாக்கியதாக கூறப்படுகிறது.

பலத்த காயம் அடைந்த இளைஞர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தாக்குதல் தொடர்பாக வெளியான வீடியோ பதிவைக் கொண்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.