​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இரிடியம் இருப்பதாகக் கூறி ரூ.11 கோடி மோசடி...

Published : Jun 06, 2024 6:19 AM

இரிடியம் இருப்பதாகக் கூறி ரூ.11 கோடி மோசடி...

Jun 06, 2024 6:19 AM

கோவை குனியமுத்தூரில் உள்ள கேரள தொழில் அதிபர் பெரோஸ்கான் வீட்டிலிருந்து வருமான வரித்துறையினர் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்துள்ள நிலையில் அவர் மீது மேலும் ஒரு மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தன்னிடம் இரிடியம் இருப்பதாகக் கூறி பெரோஸ்கான் ஏமாற்றி 11 கோடி ரூபாய் பணம் பறித்ததாக குனியமுத்தூர் போலீஸில் கேரளாவைச் சேர்ந்த சிராஜூதீன் என்பவர் புகாரளித்துள்ளார்.