​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருச்சூரில் பா.ஜ.கவிடம் தோற்றதால் வலுக்கும் எதிர்ப்பு... இனி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை- முரளீதரன்

Published : Jun 05, 2024 6:22 PM

திருச்சூரில் பா.ஜ.கவிடம் தோற்றதால் வலுக்கும் எதிர்ப்பு... இனி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை- முரளீதரன்

Jun 05, 2024 6:22 PM

இனி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என கேரள முன்னாள் முதலமைச்சர் கே.கருணாகரனின் மகனும், திருச்சூர் காங்கிரஸ் வேட்பாளருமான முரளீதரன் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

திருச்சூரில் பா.ஜ.க. வேட்பாளரும் நடிகருமான சுரேஷ் கோபியிடம் தோற்று முரளீதரன் 3ஆம் இடத்தை பிடித்ததால் இளைஞர் காங்கிரசார் மத்தியில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அவர் பொதுவாழ்க்கையில் இருந்து சில காலம் விலக முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.