​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையால் 2ஆக பிரிந்த கிராமம்

Published : Jun 05, 2024 5:04 PM

மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையால் 2ஆக பிரிந்த கிராமம்

Jun 05, 2024 5:04 PM

மதுரை வாடிப்பட்டி அருகே தனிச்சியம் கிராமம் வழியாக செல்லும் மதுரை - திண்டுக்கல் 4 வழிச்சாலையால் அடிக்கடி உயிரிழப்பு ஏற்படுவதாக புகார் கூறியுள்ள மக்கள், அந்தப்பகுதியில் சுரங்க பாதை அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை - திண்டுக்கல் 4 வழிச்சாலை அமைக்கப்பட்டபோது கிராமம் இரண்டாகப் பிரிக்கப்பட்டதாகவும், எதிர் திசையில் உள்ள பள்ளி, மயானம், கிராம நிர்வாக அலுவலகம் போன்றவற்றுக்கு சாலையை கடக்கும்போது விபத்துகள் நடப்பதாகக் கூறி மக்கள் மறியல் போராட்டம் நடத்தச் சென்றனர்.