​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தபால் வாக்குகளே முதலில் எண்ணப்படும் என தகவல்... 2029 தேர்தலை ஏப்ரலுக்குள் நடத்த முடிக்க நடவடிக்கை: ராஜீவ் குமார்

Published : Jun 03, 2024 7:18 PM

தபால் வாக்குகளே முதலில் எண்ணப்படும் என தகவல்... 2029 தேர்தலை ஏப்ரலுக்குள் நடத்த முடிக்க நடவடிக்கை: ராஜீவ் குமார்

Jun 03, 2024 7:18 PM

இம்முறை தேர்தலின்போது கடும் வெப்பம் பதிவான நிலையில், 2029 தேர்தலை ஏப்ரலுக்குள் நடத்த முடிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2019ஆம் ஆண்டில் 540 இடங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இம்முறை 39 இடங்களில் மட்டுமே மறுவாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக கூறினார்.

மேலும், முதலில் தபால் வாக்குகளே எண்ணப்படும் என்றும் அரை மணி நேரத்திற்கு பிறகே வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.