​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மிசோரம், மேகாலயா, நாகாலாந்து, அசாமில் கனமழை வெள்ளத்தில் சிக்கிய பலரைக் காணவில்லை எனத் தகவல்

Published : May 29, 2024 10:59 AM

மிசோரம், மேகாலயா, நாகாலாந்து, அசாமில் கனமழை வெள்ளத்தில் சிக்கிய பலரைக் காணவில்லை எனத் தகவல்

May 29, 2024 10:59 AM

ரீமெல் புயலால் வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 33ஆக உயர்ந்துள்ளது. மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, நாகாலாந்தில் கனமழை கொட்டியதில் வெள்ளச் சேதம் ஏற்பட்டுள்ளது.  மிசோரமில் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 27 பேர் உயிரிழந்தனர். 

கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி மேற்க வங்கத்தில் 8 பேரும் மேகாலயாவில் 2 பேரும் நாகாலாந்தில் 4 பேரும் உயிரிழந்தனர். மழை வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் பலரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. வெள்ளம், மரக்கிளைகள் விழுந்தது ஆகியவற்றில் சுமார் 500 பேர் காயமடைந்ததாக பேரிடர் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.