​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போலி ஆவணங்கள் மூலம் தனியார் வங்கியில் ரூ.10 லட்சம் கடன் பெற்று மோசடி... வங்கி மேலாளர்கள் உள்பட 5 பேர் கைது

Published : May 28, 2024 10:49 AM

போலி ஆவணங்கள் மூலம் தனியார் வங்கியில் ரூ.10 லட்சம் கடன் பெற்று மோசடி... வங்கி மேலாளர்கள் உள்பட 5 பேர் கைது

May 28, 2024 10:49 AM

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் தனியார் வங்கியில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து 10 லட்சம் ரூபாய் கடன் மோசடி செய்த தம்பதி மற்றும் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த வங்கி மேலாளர்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

வெங்கிலி கிராமத்தை சேர்ந்த சரவணன் - மஞ்சுளா தம்பதி, கடந்த 2019ஆம் ஆண்டு வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால், அது தொடர்பாக தணிக்கைத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், அவர்கள் கொடுத்த ஆவணங்கள் போலி என்பது உறுதியானது.

போலியான ஆவணங்கள் எனத் தெரிந்தும் அவற்றை ஏற்றுக்கொண்டு கடன் அளித்ததாக மேலாளர் ராஜு, மேலாளர் மஞ்சுநாதன் உள்பட 5 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள வங்கி பணியாளர்கள் இருவரை தேடி வருகின்றனர்.