​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காரைக்காலில் 13 வயது சிறுவனை கழுத்தறுத்துக் கொன்ற விட்டு 19 வயது நண்பன் தலைமறைவு

Published : May 28, 2024 9:13 AM



காரைக்காலில் 13 வயது சிறுவனை கழுத்தறுத்துக் கொன்ற விட்டு 19 வயது நண்பன் தலைமறைவு

May 28, 2024 9:13 AM

காரைக்கால் மாவட்டத்தில் 13 வயது சிறுவன் சந்தோஷை, கழுத்து அறுத்துக் கொலை செய்துவிட்டு தலைமறைவாகிவிட்ட 19 வயது நண்பன் சாகுல் ஹமீதை போலீஸார் தேடி வருகின்றனர்.

நிரவி ஒயிட் ஹவுஸ் காலனியைச் சேர்ந்த சிங்காரவேலுவின் மகன் சந்தோஷ், நேற்று விளையாடச் சென்று நீண்ட நேரமாக வீடு திரும்பாததால், பெற்றோர் பல இடங்களில் தேடியுள்ளனர்.

அவனுடைய தாய் அருகில் உள்ள சாகுல் ஹமீது வீட்டுக்குச் சென்றபோது, வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில், கதவு இடுக்கு வழியாகப் பார்த்தபோது சந்தோஷ் ரத்த வெள்ளத்தில் கிடப்பது தெரிந்து கூச்சலிட்டதாக கூறப்படுகிறது.

அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து கதவை உடைத்துப் பார்த்தபோது, கழுத்து அறுபட்ட நிலையில் சந்தோஷின் உடல் கிடந்துள்ளது. தகவலையடுத்து அங்கு வந்த போலீஸார், சந்தோஷ் உடலை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

பள்ளிப்படிப்பை முடிக்காத சாகுல் ஹமீது, சப்பாத்தி, பரோட்டா விற்கும் தாய் ஷகிலாவின் அரவணைப்பில், நண்பர்களுடன் விளையாடி பொழுதை கழித்து வந்துள்ளார். அவரை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.