​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் இறுதிகட்டத்தில் நோட்டு தயாரிப்பு பணி.. நடப்பாண்டில் ரூ.250 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றதாக தகவல்

Published : May 27, 2024 9:20 PM

பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் இறுதிகட்டத்தில் நோட்டு தயாரிப்பு பணி.. நடப்பாண்டில் ரூ.250 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றதாக தகவல்

May 27, 2024 9:20 PM

தமிழகத்தில் ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், சிவகாசியில் நோட்டுகளை தயாரித்து சப்ளை செய்யும் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

நடப்பாண்டில் சிவகாசியில் மட்டும் நோட்டு புக் தயாரிப்பதில் 250 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

நோட்டு புக்குகள் தயாரிக்க தேவையான காகிதங்களின் விலை வெகுவாக குறைந்ததால், 20 சதவீதம் வரை நோட்டுகளின் விற்பனை விலை குறைந்துள்ளதாக நோட் புக் தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.