​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாய் கடித்ததால் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லவிருந்தவரின் பயணம் ரத்து.. உரிமையாளர் மீது போலீசில் புகார்

Published : May 27, 2024 6:32 PM

நாய் கடித்ததால் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லவிருந்தவரின் பயணம் ரத்து.. உரிமையாளர் மீது போலீசில் புகார்

May 27, 2024 6:32 PM

மதுரை மாவட்டம், மேலூர் அருகே நாய் கடித்ததால் வேலைக்காக வெளிநாடு செல்லவிருந்த தனது பயணத்தை தள்ளிப்போட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக கேசவன் என்பவர் தெரிவித்துள்ளார்.

கீழவளவு பகுதியை சேர்ந்த கேசவனை, அதே பகுதியில் வசிக்கும் கருப்பையா என்பவர் வளர்க்கும் நாய் கடித்ததாக கூறப்படுகிறது.

மருத்துவ சிகிச்சைக்கு பிறகே விமான பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உள்ளதாகவும்,

அந்த நாய் 10க்கும் மேற்பட்டவர்களை கடித்து காயம் ஏற்படுத்தியுள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.