​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
75 பவுன் கொள்ளை வழக்கில் பிடிபட்டவருக்கு காலில் மாவுக்கட்டு.. பிடிபட்டவரிடமிருந்து 30 பவுன் நகை, 3 கிலோ வெள்ளி பறிமுதல்

Published : May 27, 2024 5:34 PM

75 பவுன் கொள்ளை வழக்கில் பிடிபட்டவருக்கு காலில் மாவுக்கட்டு.. பிடிபட்டவரிடமிருந்து 30 பவுன் நகை, 3 கிலோ வெள்ளி பறிமுதல்

May 27, 2024 5:34 PM

காரைக்குடியில் நகைக் கடைகளுக்கு வழங்குவதற்காக வியாபாரி கொண்டு வந்த 75 சவரன் நகை மற்றும் 7 கிலோ வெள்ளிக் கட்டிகளை கத்தி,

அரிவாளை காட்டி கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். கடந்த 21-ஆம் தேதி 2 பைக்குகளில் வந்த 5 பேர் கொள்ளையில் ஈடுபட்டதாக வியாபாரி தந்த புகாரின் பேரில் அப்பகுதி சி.சி.டி.வி பதிவுகளை ஆய்வு செய்த போலீசார்,

பல்வேறு கொலை, வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய கீழக்குளம் சாந்தகுமாரை கைது செய்து 30 பவுன் நகை, 3 கிலோ வெள்ளி கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

தமது கூட்டாளிகள் ஆவுடைப்பொய்கை முந்திரி காட்டில் பதுங்கி இருப்பதாக கூறி அழைத்துச் சென்ற சாந்தகுமார், சிறுநீர் கழிப்பதாகக் கூறி தப்பிச் செல்ல முயன்ற போது கீழே விழுந்ததால் மாவுக்கட்டு போடப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.