​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கஞ்சா வைத்திருந்த வழக்கில் ஜாமீன் கோரி சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் மனு... விசாரணை வரும் மே 30ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

Published : May 27, 2024 1:57 PM

கஞ்சா வைத்திருந்த வழக்கில் ஜாமீன் கோரி சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் மனு... விசாரணை வரும் மே 30ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

May 27, 2024 1:57 PM

கஞ்சா வைத்திருந்ததாக தேனி பழனிசெட்டிபட்டி போலீசார் தொடர்ந்த வழக்கில் கைதான சவுக்கு சங்கர், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வரும் மே 30 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சவுக்கு சங்கர் தரப்பில் கால அவகாசம் கோரியதை ஏற்று வழக்கு விசாரணையை ஒத்திவைத்த மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி, சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என கூறி குறிஞ்சியர் பெண்கள் ஜனநாயக பேரவை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார்.