​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஓட்டுநர் கண் அயர்ந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்புச் சுவரில் காரை மோதியதில் 4 பேர் பலி, 2 பேர் காயம்

Published : May 27, 2024 10:02 AM

ஓட்டுநர் கண் அயர்ந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்புச் சுவரில் காரை மோதியதில் 4 பேர் பலி, 2 பேர் காயம்

May 27, 2024 10:02 AM

திருப்பதி அருகே சந்திரகிரி பகுதியில், ஓட்டுநர் கண் அயர்ந்ததால், கட்டுப்பாட்டை இழந்த கார், வேகமாகச் சென்று தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் வடிகாலுக்காக கட்டப்பட்ட தடுப்புச்சுவற்றில் மோதியதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த அக்குடும்பத்தினர், நேற்று இரவு திருப்பதியில் தரிசனம் முடித்துவிட்டு, இன்று காலை காணிப்பாக்கம் கோயிலுக்கு சென்றபோது விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் காயமடைந்த 2 பேரை மருத்துவமனையில் அனுமதித்து, சந்திரகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெடுந்தூரம் குடும்பத்துடன் காரில் பயணிப்பவர்கள் அவ்வப்போது உரிய ஓய்வு எடுத்து காரை ஓட்டவேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.