​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கட்டிலில் இருந்து விழுந்து குழந்தை பலியானதாக தாய் தகவல்.. கணவர் போலீசில் புகார்

Published : May 26, 2024 6:42 PM

கட்டிலில் இருந்து விழுந்து குழந்தை பலியானதாக தாய் தகவல்.. கணவர் போலீசில் புகார்

May 26, 2024 6:42 PM

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்த முருகன், பிரியா தம்பதிக்கு 4 மற்றும் 1 வயதில் பெண் குழந்தைகள்.

தாத்தையங்கார் பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு செல்வதாகக்கூறி ஒரு வயது குழந்தையுடன் சென்ற ப்ரியா, கரூர் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்துள்ளார்.

படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்தபோது குழந்தை கீழே விழுந்ததால் மயக்கமடைந்ததாகவும் உடனே கரூர் அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றபோது குழந்தையை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தாகவும் கணவரிடம் ப்ரியா கூறியுள்ளார்.

குழந்தையின் உடலில் காயங்கள் இருந்ததால், குழந்தையின் இறப்பில் சந்தேகம் எழுவதாக போலீசில் புகார் செய்ததையடுத்து அவர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.