​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார்.. காவல் நிலையம் முன்பே உயிரிழந்த உரிமையாளர்.. உறவினர்களின் சாலை மாறியலால் போலீசார் கொடுத்த விளக்கம்

Published : May 26, 2024 10:42 AM

வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார்.. காவல் நிலையம் முன்பே உயிரிழந்த உரிமையாளர்.. உறவினர்களின் சாலை மாறியலால் போலீசார் கொடுத்த விளக்கம்

May 26, 2024 10:42 AM

நெய்வேலியில் மது அருந்திவிட்டு ஓட்டியதாக ராஜ்குமார் என்பவரின் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்த நிலையில், காவல் நிலையம் அருகிலேயே தலைநசுங்கி அவர் உயிரிழந்து கிடந்ததால், போலீசார் தாக்கியதாகக்கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கீழக்கொல்லையைச் சேர்ந்த ராஜ்குமார், இரவு ஒன்றரை மணியளவில் போலீசாரிடம் பிடிபட்டுள்ளார்.

காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்தவர் போதையில் தடுமாறி விழுந்து வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்திருக்கலாம் என போலீசார் கூறும் நிலையில், அவரது இடுப்புக் கீழே போலீசார் தாக்கியதற்கான தழும்புகள் இருப்பதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.