​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
500 ரூபாய் நோட்டுக் கட்டுகளை சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற பெண் பயணி.. ரூ.20 லட்சம் பறிமுதல் செய்த பாதுகாப்பு அதிகாரிகள்

Published : May 26, 2024 10:13 AM

500 ரூபாய் நோட்டுக் கட்டுகளை சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற பெண் பயணி.. ரூ.20 லட்சம் பறிமுதல் செய்த பாதுகாப்பு அதிகாரிகள்

May 26, 2024 10:13 AM

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு  சூட்கேஸ் ரகசிய அறைக்குள் 500 ரூபாய் நோட்டுக் கட்டுகளை மறைத்து பெண் பயணி கடத்த முயன்ற 20 லட்சம் ரூபாயை, விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்து, சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சென்னையைச் சேர்ந்த அந்தப் பெண் பயணி, கைது செய்யப்பட்டு வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். 20 லட்சம் ரூபாயை சிங்கப்பூரில் குறிப்பிட்ட நபரிடம் ஒப்படைத்தால், 10 ஆயிரம் ரூபாய் தருவதாக ஒருவர் கூறியதால், பணத்துக்கு ஆசைப்பட்டு பணத்தை கடத்த முயன்றதாக போலீஸ் விசாரணையில் கூறினார்.