​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கேரளாவில் மீண்டும் பறவைக் காய்ச்சல் பரவல்?

Published : May 25, 2024 9:16 PM

கேரளாவில் மீண்டும் பறவைக் காய்ச்சல் பரவல்?

May 25, 2024 9:16 PM

கேரளாவில் கோழி, வாத்து உள்ளிட்ட பறவைகளிடையே மீண்டும் பறவைக் காய்ச்சல் பரவி வருவதாக அம்மாநில அரசு கூறியுள்ளது.

கோட்டயத்தில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் ஏராளமான கோழிகள், வாத்துகள் அழிக்கப்பட்டன.

வரும் 29-ம் தேதி வரை கோழி, வாத்து இறைச்சி, முட்டைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்கள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.