​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரவுடியின் கையில் இருந்த கத்தியைப் பறித்து அவரையே கொலை செய்ததாக 5 பேர் கைது

Published : May 25, 2024 6:00 PM

ரவுடியின் கையில் இருந்த கத்தியைப் பறித்து அவரையே கொலை செய்ததாக 5 பேர் கைது

May 25, 2024 6:00 PM

தேனி பெரியகுளத்தில் விரட்டி சென்ற ரவுடியின் கையில் இருந்த கத்தியைப் பறித்து அவரையே கொலை செய்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

அழகர்சாமிபுரத்தைச் சேர்ந்த ரவுடி முட்டைக் கண்ணன் தன்னிடம் வழிப்பறி செய்ய முயன்று கையை கடித்து வைத்ததாக அதேப்பகுதியைச் சேர்ந்த கரண்குமார் என்பவர் போலீஸில் புகாரளித்தார்.

தன்மீது புகாரளித்த கரண்குமாரை கையில் கத்தியோடு முட்டைக்கண்ணன் விரட்டிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த கரண்குமாரின் சகோதரர் புகழேந்தி மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து முட்டைக் கண்ணனை பிடித்து தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.