​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் விதிமுறைகளை மீறியதாக தலா ரூ.500 அபராதம்

Published : May 24, 2024 8:39 PM

அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் விதிமுறைகளை மீறியதாக தலா ரூ.500 அபராதம்

May 24, 2024 8:39 PM

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் நின்று சோதனை நடத்திய போக்குவரத்து போலீஸார் போக்குவரத்து விதிகளை மீறியதாகக் கூறி 5 அரசுப் பேருந்துகளின் ஓட்டுநர்களுக்கு தலா 500 ரூபாய் அபராதம் விதித்தனர். தடுப்புகளை அகற்றி விட்டு ஒருவழிப்பாதையில் இயங்கிய சுமார் 50 பல்வேறு வாகனங்களின் ஓட்டுநர்களை போலீஸார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

 

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீஸார், சீட் பெல்ட் அணியாமல் பேருந்து ஓட்டியதாக அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் 3 பேருக்கு தலா 500 ரூபாயை அபராதமாக விதித்தனர்.