​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தீபக் ராஜாவுக்கு ஸ்கெட்ச் போட்டது இவங்க தானாம் வடிவேல் முருகனுக்காக ரிவென்ஞ்..! சிறை நட்புக்காக செய்தார்களாம்..!

Published : May 24, 2024 7:39 PM



தீபக் ராஜாவுக்கு ஸ்கெட்ச் போட்டது இவங்க தானாம் வடிவேல் முருகனுக்காக ரிவென்ஞ்..! சிறை நட்புக்காக செய்தார்களாம்..!

May 24, 2024 7:39 PM

தூத்துக்குடி அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெட்டிக் கொல்லப்பட்ட பக்கப்பட்டி வடிவேல் முருகன் என்பவரின் கொலைக்கு பழிக்கு பழியாகவே,  ரவுடி தீபக்ராஜாவை நெல்லையில் தீர்த்துக்கட்டியதாக கொலையாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நெல்லை கே.டி.சி நகர் உணவகம் முன்பு தீபக் ராஜா என்கிற தீபக் பாண்டியன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வல்லநாடு தம்பான் என்பவர் மீது ஒரு கொலை வழக்கும், மேலநத்தம் முத்து சரவணன் மீது கஞ்சா விற்பனை உள்ளிட்ட இரண்டு வழக்குகளும் உள்ளன. ஸ்ரீவைகுண்டம் ஐயப்பன் மீது நெல்லையில் ஒரு கொலை வழக்கு உள்ளிட்ட இரு வழக்குகளும், முன்னீர்பள்ளம் ஐயப்பன் மீது ஒரு கொலை முயற்சி வழக்கு உட்பட 5 வழக்குகளும் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தங்களுடன் சிறையில் இருந்த சமுதாய நண்பர் வடிவேல் முருகன் என்பவரின் கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த கொலை சம்பவத்தை நிகழ்த்தியதாக கைதானவர்கள் தெரிவித்துள்ளனர். பக்கப்பட்டியை சேர்ந்த வடிவேல் முருகன் அந்த பகுதியில் தன் சாதி சார்ந்த நடவடிக்கையில் தீவிரம் காட்டி வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மர்மகும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

வடிவேல் முருகனின் குடும்பத்தினரின் கண்ணீருக்கு பதில் சொல்லும் விதமாக, சிறை நண்பர்களான நவீன் உள்ளிட்டோர் பழிக்கு பழிவாங்க திட்டம் தீட்டியதாக கூறப்படுகின்றது. வடிவேல் முருகன் கொலை வழக்கில் கைதான சின்னதம்பி ,அருண்குமார் , மாரிமுத்து உள்ளிடோருக்கு பின்னணியில் இருந்து உதவிகள் செய்து வந்தது தீபக்ராஜா என்பது தெரியவந்ததால் முதலில் அவரை கொலை செய்ததாக போலீசில் சிக்கியவர்கள் வாக்கு மூலம் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய நவீன் உள்ளிட்ட மற்றவர்களை 16 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.