​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மது போதையில் தனியார் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய சம்பவத்தில்... 5 பேர் கொண்ட கும்பல் கைது

Published : May 24, 2024 5:40 PM

மது போதையில் தனியார் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய சம்பவத்தில்... 5 பேர் கொண்ட கும்பல் கைது

May 24, 2024 5:40 PM

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கடந்த 22ஆம் தேதி கஞ்சா மற்றும் மது போதையில் ஆட்டோவில் சென்று தனியார் பேருந்தை வழிமறித்து நடத்துநரையும் அவரது உதவியாளரையும் தாக்கிய 5 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.

ஆட்டோவில் சென்ற அந்த கும்பல் பேருந்துக்கு வழிவிடாதது குறித்து தட்டிக்கேட்டதால் இந்தத் தாக்குதல் நடந்த நிலையில், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் அவர்களைக் கைது செய்துள்ளனர்.