​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆம்பூரில் கவனக் குறைவால் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு

Published : May 23, 2024 6:03 PM

ஆம்பூரில் கவனக் குறைவால் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு

May 23, 2024 6:03 PM

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் இந்திரா நகரைச் சேர்ந்த  நவீன்குமார் என்பவர் தனது வீட்டின் மாடி மீது நின்று  செல்போன் பேசிக்கொண்டு இருந்தபோது கவனக் குறைவால் மாடியில்  செல்லும் மின் கம்பி மீது கைகள் பட்டு  மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார் .

அவருடைய அலறல் சத்தம் கேட்டு  அருகில் இருந்தவர்கள்   மயங்கிய  நிலையில் இருந்த அவரை மீட்டு  மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது  அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத்  தெரிவித்துள்ளனர்.இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.