​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கேரளாவில் 7 கடலோர மாவட்டங்களுக்கு மிக அதிகன மழை எச்சரிக்கை... மீனவர்கள் மீன் பிடிக்கச்செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம்

Published : May 23, 2024 4:11 PM

கேரளாவில் 7 கடலோர மாவட்டங்களுக்கு மிக அதிகன மழை எச்சரிக்கை... மீனவர்கள் மீன் பிடிக்கச்செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம்

May 23, 2024 4:11 PM

கேரளாவில் பெய்த அதிகன மழையால், வீடுகள் மற்றும் மருத்துவமனைகளில் மழைநீர் புகுந்தது. கொச்சியில் 100க்கும் மேற்பட்ட கார்கள் தண்ணீரில் மூழ்கின.

திருச்சூர் மாவட்டத்திலும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததில், அங்குள்ள மருத்துவமனை மற்றும் அதனை சுற்றியுள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது.

தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்பதால், எர்ணாகுளம் முதல் வயநாடு வரையிலான 7 கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.