​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குருவாயூர் ரயிலில் பயணிகளுக்கிடையே மோதல்... 4 பேர் கீழே இறக்கி விடப்பட்டனர்

Published : May 23, 2024 6:58 AM

குருவாயூர் ரயிலில் பயணிகளுக்கிடையே மோதல்... 4 பேர் கீழே இறக்கி விடப்பட்டனர்

May 23, 2024 6:58 AM

சென்னையிலிருந்து குருவாயூர் நோக்கிச் சென்ற ரயிலில் முன்பதிவில்லா பெட்டியில் கேரளாவைச் சேர்ந்த 4 பேர் மது போதையில் மற்ற பயணிகளிடம் தகராறில் ஈடுபட்டதாகக் கூறி நெல்லை குறுக்குத்துறையில் ரயில் நிறுத்தப்பட்டது.

சக பயணிகள் அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்திய நிலையில், கீழே இறக்கப்பட்ட 4 பேரில் ஒருவர் மின்கம்பத்தில் தனது தலையை தானே மோதிக் கொண்டதில் காயம் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.