​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆண் நண்பருடன் சேர்ந்து 5 வயது மகளை கொன்ற கொடூர தாய்... உடலை கிணற்றில் வீசிவிட்டு மகளை காணவில்லை என நாடகம்

Published : May 22, 2024 5:03 PM

ஆண் நண்பருடன் சேர்ந்து 5 வயது மகளை கொன்ற கொடூர தாய்... உடலை கிணற்றில் வீசிவிட்டு மகளை காணவில்லை என நாடகம்

May 22, 2024 5:03 PM

கணவர் துபாயில் பணியாற்றிவரும் நிலையில், ஆண் நண்பருடன் சேர்ந்து 5 வயது மகளை கிணற்றில் வீசி கொன்ற கொடூர மனம் படைத்த தாயாரை மேலூர் போலீசார் கைது செய்தனர். ஆட்டுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த மலர் செல்வி, 2 இளைஞர்களுடன் திருமணம் தாண்டிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.

நேற்று மாலை தனது மகள் கார்த்திகாவை காணவில்லை என மலர் செல்வி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது நடத்தையில் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரித்தபோது, தனது ஆண் நண்பர்களுள் ஒருவரான தர்மசுந்தரத்துடன் நெருக்கமாக இருப்பதை கார்த்திகா பார்த்துவிட்டதாகவும், இதுகுறித்து தந்தையிடம் கூறப்போவதாக தெரிவித்ததால் இருவரும் சேர்ந்து அவரை கொன்று உடலை கிணற்றில் வீசிவிட்டதாக ஒப்புக்கொண்டார்.