​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த நபர் ...

Published : May 22, 2024 12:58 PM

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த நபர் ...

May 22, 2024 12:58 PM

விழுப்புரத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, போலீசார் தாக்கியதால் உயிரிழந்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட ராஜா என்பவரின் உடல், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தோண்டி எடுக்கப்பட்டு மறு பிரேதப்பரிசோதனை நடத்தப்பட்டது.

டாஸ்மாக் கேண்டீன் ஊழியரான ராஜா கடந்த மாதம் 10ஆம் தேதி போலீசாரால் விசாரிக்கப்பட்ட நிலையில், வீடு திரும்பியவர் திடீரென உயிரிழந்தார்.

தனது கணவரின்உடலை போலீசார் அவசர அவசரமாக பிரேதப் பரிசோதனை செய்து எரிக்க முயற்சித்ததாக ராஜாவின் மனைவி குற்றம்சாட்டியிருந்தார்.