​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் மீது 5 பிரிவுகளில் வழக்கு...

Published : May 22, 2024 7:15 AM

முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் மீது 5 பிரிவுகளில் வழக்கு...

May 22, 2024 7:15 AM

பண்ணை வீட்டிற்குள் அடியாட்களுடன் நுழைந்து காவலாளியை தாக்கி பொருட்களை உடைத்து சேதப்படுத்தியதாக ஐஏஎஸ் அதிகாரி பீலாவெங்கடேசன் அளித்த புகாரில் அவரது கணவரும் காவல்துறை முன்னாள் டி.ஜி.பியுமான ராஜேஷ் தாஸ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை தையூர் பகுதியில் 2 ஏக்கர் நிலம் வாங்கி பல கோடி மதிப்பில் கட்டப்பட்ட பண்ணை வீட்டிற்காக இருவரது பெயரிலும் வங்கியில் கடன் வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பெண் எஸ்.பி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ராஜேஷ்தாஸிற்கு நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.

இதனால், கணவன் மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டதால் பண்ணை வீட்டை பீலா தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாகவும், அங்கு ராஜேஷ்தாஸ் அத்துமீறி நுழைந்ததாகவும் கூறப்படுகிறது.