​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிவகங்கை சூசையார்பட்டினம் சூசையப்பர் ஆலய விவகாரம்... உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

Published : May 21, 2024 4:05 PM

சிவகங்கை சூசையார்பட்டினம் சூசையப்பர் ஆலய விவகாரம்... உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

May 21, 2024 4:05 PM

சிவகங்கை, சூசையார்பட்டினம் கிராமத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களை பங்கு பேரவையில் உறுப்பினராக்குவதோடு, ஆலய திருவிழாவின்போது சப்பரம் தூக்குவதற்கும், இறந்தவர் உடலை கொண்டு செல்லும் வண்டியை பயன்படுத்த அனுமதிக்கவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில், அங்குள்ள சூசையப்பர் ஆலய கொண்டாட்டங்களில் பட்டியலின மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் என குற்றம்சாட்டப்பட்டிருந்தது.