​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஓசூர், சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்மழையால் சிரமத்துடன் செல்லும் வாகனங்கள்

Published : May 21, 2024 2:31 PM

ஓசூர், சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்மழையால் சிரமத்துடன் செல்லும் வாகனங்கள்

May 21, 2024 2:31 PM

தொடர்மழையால் ஓசூர் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டது.

இந்த பாலத்திற்கு அருகில் புதிய ரயில்பாதையின் கீழ் சாலையை அகலப்படுத்தி இரு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெறும் நிலையில், மாற்றுப்பாதையான இங்கும் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி சார்பில் பொருத்தப்பட்ட ராட்சத மோட்டார் பழுதடைந்துள்ளதால் தண்ணீரை வெளியேற்ற முடியாத சூழ்நிலை உள்ளது.