​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தனியார் நிறுவனத்துக்கு கள ஆய்வுக்குச் சென்ற மாநகராட்சி உரிமம் ஆய்வாளரை தாக்கிய மேலாளர் கைது

Published : May 21, 2024 1:59 PM

தனியார் நிறுவனத்துக்கு கள ஆய்வுக்குச் சென்ற மாநகராட்சி உரிமம் ஆய்வாளரை தாக்கிய மேலாளர் கைது

May 21, 2024 1:59 PM

சென்னை கீழ்ப்பாக்கத்தில் இயங்கி வரும் லிங்க்கேஜ் லாஜிஸ்டிக்ஸ் என்ற நிறுவனத்துக்கு கள ஆய்வுக்காகச் சென்ற மாநகராட்சி உரிம ஆய்வாளர் சங்கர் என்பவரை நிறுவனத்தின் மேலாளர் ரவிக்குமார் என்பவர் தகாத சொற்களால் பேசி தாக்கியதாக காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் உரிமம் பெற்றுதான் செயல்படுகிறது என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்களைக் காண்பிக்குமாறு கேட்டதற்கு, அலட்சியமாக பதிலளித்த ரவிக்குமார், தன்னைத் தாக்கி சட்டையைக் கிழித்ததாக சங்கர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.