​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பேருந்தில் தவறவிட்ட 3 சவரன் நகை மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைப்பு

Published : May 21, 2024 8:04 AM

பேருந்தில் தவறவிட்ட 3 சவரன் நகை மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைப்பு

May 21, 2024 8:04 AM

காஞ்சிபுரத்தில் இருந்து சேலம் சென்ற செய்யாறு பணிமனையைச் சேர்ந்த அரசுப் பேருந்து தடம் எண் 438-ல், மனைவி மற்றும் பேத்தியுடன் ஆரணிக்குப் பயணம் செய்த விஜயபாலன் என்பவர், 3 சவரன் தங்க நகையை பேருந்தில் தவறவிட்டுள்ளார்.

இதுகுறித்து ஆரணி பேருந்து நிலைய நேரக் காப்பாளரிடம் விஜயபாலன் புகார் தெரிவித்தார்.

செய்யாறு பணிமனை மேலாளர் மூலம் பேருந்து நடத்துநர் வரதராஜனிடம் தகவல் தெரிவித்து பேருந்தில் தேடியதில் இருக்கைக்குக் கீழே கிடந்த நகை மீட்கப்பட்டு, உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.