​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நிலப்பிரச்சனையில் எதிர்த் தரப்புக்காக ஆஜரான வழக்கறிஞர் மீது தாக்குதல்

Published : May 21, 2024 7:04 AM

நிலப்பிரச்சனையில் எதிர்த் தரப்புக்காக ஆஜரான வழக்கறிஞர் மீது தாக்குதல்

May 21, 2024 7:04 AM

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே நிலப்பிரச்சனையில் நீதிமன்றத்தில் எதிர் தரப்புக்காக ஆஜராகி, வாதாடி வெற்றி பெற்றதற்காக வழக்கறிஞரை தாக்கிய சகோதரிகள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

வெள்ளக்கல்பட்டி பகுதியைச் சேர்ந்த ராமசாமி என்பவர் அடமானம் வைத்த நிலத்தை பணம் கொடுத்தவர் அபகரித்ததால் பிரச்சனை நீதிமன்றம் சென்றது. வழக்கில், பணம் கொடுத்த மாணிக்கம் என்பவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததால், ராமசாமியின் மகள்கள், எதிர்தரப்பு வழக்கறிஞரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான புகாரில் நாமகிரிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்திய போது சகோதரிகளில் ஒருவரான கவிதா தப்பி ஓடினார்.

அவரை பெண் காவலர்கள் விரட்டிச் சென்று கைது செய்தனர்.