​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருப்பதியில் சிறுத்தை நடமாட்டத்தால் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் அச்சம்... தடங்களை கண்டுபிடிக்க வன ஊழியர்கள் ஆய்வு

Published : May 20, 2024 8:02 PM

திருப்பதியில் சிறுத்தை நடமாட்டத்தால் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் அச்சம்... தடங்களை கண்டுபிடிக்க வன ஊழியர்கள் ஆய்வு

May 20, 2024 8:02 PM

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பாத யாத்திரையாக செல்லும் அலிபிரி நடைபாதையின் இறுதிப் படிகளில் 2 சிறுத்தைகள் சுற்றித் திரிந்ததைக் கண்டு பக்தர்கள் அச்சமடைந்தனர்.

இது பற்றி அறிந்ததும், தேவஸ்தான விஜிலென்ஸ் மற்றும் போலீசார், வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். சிறுத்தையின் தடங்களை கண்டுபிடிக்க வன ஊழியர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். பக்தர்கள் தனியாக செல்லாமல் கூட்டமாக அனுப்பப்படுகின்றனர்.