​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தியர்களை ஈரான் அழைத்துச் சென்று உடல் உறுப்புகளை விற்ற புகாரில் சபித் நாசர் என்ற நபர் கைது

Published : May 20, 2024 6:36 PM

இந்தியர்களை ஈரான் அழைத்துச் சென்று உடல் உறுப்புகளை விற்ற புகாரில் சபித் நாசர் என்ற நபர் கைது

May 20, 2024 6:36 PM

கேரளா மற்றும் வட இந்தியாவை சேர்ந்த 20 பேரை ஈரானுக்கு அழைத்துச் சென்று உடல் உறுப்புகளை விற்பனை செய்ததாக சபித் நாசர் என்ற நபரை கொச்சி நெடும்பாசேரி விமான நிலையத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

ஈரானில் உடலுறுப்பு வியாபாரம் சட்ட ரீதியானது எனக்கூறி நம்ப வைத்து அவர்களை அழைத்துச் சென்றதாகவும், உறுப்புகளை விற்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய், சுபித்துக்கு 5 லட்சம் ரூபாய் என பிரித்துக் கொண்டதாகவும் தெரிவித்த என்.ஐ.ஏ. அதிகாரிகள், சுபித்துடன் தங்கியிருந்த பெண் ஒருவரை தேடி வருவதாகவும் என்.ஐ.ஏ கூறினர்.