​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நள்ளிரவு நேரத்தில் காரில் காப்பாற்றுங்கள் என கூச்சலிட்ட இளம் பெண்... நேரில் சென்று எச்சரித்த போலீசார்

Published : May 20, 2024 3:29 PM

நள்ளிரவு நேரத்தில் காரில் காப்பாற்றுங்கள் என கூச்சலிட்ட இளம் பெண்... நேரில் சென்று எச்சரித்த போலீசார்

May 20, 2024 3:29 PM

சென்னையில் நள்ளிரவில் சாலையில் சென்ற காரில் இருந்து காப்பாற்றுங்கள் என்று இளம் பெண் கூச்சலிட்டதைக் கண்டு பெண் மருத்துவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் அப்பகுதி சி.சி.டி.வி.க்களை ஆய்வு செய்தனர்.

அதில் சம்பந்தப்பட்ட கார் சாலிகிராமத்தில் உள்ள தொழிலதிபர் ஒருவருடையது என்று தெரிய வந்ததன் பேரில் போலீசார் நேரில் சென்று விசாரித்தனர்.

அப்போது, காரில் கத்திக் கொண்டே சென்றவர், அண்மையில் 10-ஆம் வகுப்பு முடித்த மாணவி என்றும், பாஸ் ஆனதுக்கு ட்ரீட் கேட்ட நண்பர்கள், குறைந்த மதிப்பெண் எடுத்ததற்கு கிண்டல் செய்ததால் கதவைத் திறந்து கத்தியதாகவும் அப்பெண் போலீசாரிடம் தெரிவித்தார். அவரை போலீசார் எச்சரித்துவிட்டு திரும்பினர்.