​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஒரே நாளில் 2 வங்கிகளில் நடந்த கொள்ளை முயற்சி... உள்ளே நுழைய முடியாததால் தப்பிச் சென்ற மர்ம நபர்கள்

Published : May 20, 2024 3:20 PM

ஒரே நாளில் 2 வங்கிகளில் நடந்த கொள்ளை முயற்சி... உள்ளே நுழைய முடியாததால் தப்பிச் சென்ற மர்ம நபர்கள்

May 20, 2024 3:20 PM

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை இந்தியன் வங்கி கிளையில் ஜன்னல் கம்பி மற்றும் முன்பக்க கதவின் பூட்டை உடைத்த போதிலும் உள்ளே நுழைய முடியாததால் கொள்ளை முயற்சி கைவிடப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதே போன்று, சுமார் 4 கிலோ தங்க நகைகளை அடமானம் உள்ளதாகக் கூறப்படும் கீழக்கண்டனை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் பூட்டுகளை உடைத்து கதவை திறக்க மர்ம நபர்கள் முயன்ற போது, எச்சரிக்கை மணி ஒலித்ததால் கொள்ளை முயற்சி தவிர்க்கப்பட்டது.