​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தொடர் மழையால் பருத்தி வயல்களில் தண்ணீர் தேங்கி நிறம் மாறும் பஞ்சால் விவசாயிகள் வேதனை

Published : May 20, 2024 2:52 PM

தொடர் மழையால் பருத்தி வயல்களில் தண்ணீர் தேங்கி நிறம் மாறும் பஞ்சால் விவசாயிகள் வேதனை

May 20, 2024 2:52 PM

திருவாரூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் பருத்தி வயல்களில் தண்ணீர் தேங்கி பஞ்சு நிறம் மாறி உரிய விலை போகாமல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

நன்னிலம், வலங்கைமான், குடவாசல், நீடாமங்கலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக பெய்த மழையின் காரணமாக பூக்கள் அனைத்தும் உதிர்ந்து மகசூல் பாதிக்கப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.