​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மெட்ரோ ரயில் நிலையத்தில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது வீசப்பட்டது ஆசிட் அல்ல என போலீஸ் தகவல்

Published : May 20, 2024 2:37 PM

மெட்ரோ ரயில் நிலையத்தில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது வீசப்பட்டது ஆசிட் அல்ல என போலீஸ் தகவல்

May 20, 2024 2:37 PM

சென்னை ஈக்காட்டுத்தாங்கல் மெட்ரோ ரயில் நிலைய வாயிலில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது ஆசிட் வீசப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அது அமோனியம் கரைசல் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு நடந்த இந்த சம்பவத்தில் குழந்தை உள்பட 5 பேர் காயமடைந்த நிலையில் குற்றவாளியை போலீசார் கண்டுபிடித்தனர்.

மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள கருப்பட்டி காபி கடையில் வேலை பார்த்த ராஜா என்பவர், உரிமையாளரின் செல்போனை திருடியதாகவும், அதனை அங்கு அவருடன் பணியாற்றிய ரேவதி, கணேசன் தம்பதி காட்டிக்கொடுத்ததாகக் கூறி பழி வாங்குவதற்காக பாட்டிலில் அமோனியம் கரைசல் எடுத்து வந்து வீசியுள்ளதாகவும் கிண்டி போலீசார் தெரிவித்துள்ளனர்.

தப்பிச்சென்ற ராஜாவை போலீசார் தேடி வருகின்றனர்.