​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மதுரை மாநகரில் கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்..

Published : May 20, 2024 9:16 AM

மதுரை மாநகரில் கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்..

May 20, 2024 9:16 AM

மதுரையில் கனமழை பெய்த நிலையில், மானகிரி பகுதியில் உள்ள வீடுகளுக்குள் கணுக்கால் அளவு தண்ணீர் தேங்கி குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

அப்போலோ சிக்னலில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளுக்காக மானகிரி பகுதியில் கழிவுநீர் கால்வாய் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதன் காரணமாகவே மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து விட்டதாகக் அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.