​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பழம் பறித்து சாப்பிட்ட சிறுவர்களை ஆபாசமாகப் பேசிய நபர்.. தட்டிக்கேட்டதாத்தாவை போதையில் வெட்டிக் கொன்ற பயங்கரம்

Published : May 20, 2024 8:10 AM

பழம் பறித்து சாப்பிட்ட சிறுவர்களை ஆபாசமாகப் பேசிய நபர்.. தட்டிக்கேட்டதாத்தாவை போதையில் வெட்டிக் கொன்ற பயங்கரம்

May 20, 2024 8:10 AM

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தியாகராஜபுரத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரது பேரக் குழந்தைகள் அங்கிருந்த சீனிபழ மரம் என்றும் அழைக்கப்படும் இச்சிலி மரத்திலிருந்து பழங்களைப் பறித்து சாப்பிட்டுள்ளனர்.

இதனைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரரான இளையராஜா, மது போதையில் அவர்களை ஆபாசமாகப் பேசவே, சண்முகம் தட்டிக்கேட்டுள்ளார்.

வாய்த்தகராறு கைகலப்பாக மாறி, இளையராஜா சண்முகத்தை அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது.

சண்முகம் உயிரிழந்த நிலையில், இளையராஜா கைது செய்யப்பட்டுள்ளான்.

இதனிடையே அரிவாளை கையில் வைத்துக் கொண்டு இளையராஜா மிரட்டல் விடுத்த காட்சிகள் வெளியாகியுள்ளன.