​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வீட்டின் மாடியில் விளையாடிய இரு சிறுவர்கள் தாழ்வாகச் சென்ற மின்கம்பியைத் தொட்டதில் ஒருவர் பலி - மற்றொருவர் படுகாயம்

Published : May 20, 2024 8:01 AM

வீட்டின் மாடியில் விளையாடிய இரு சிறுவர்கள் தாழ்வாகச் சென்ற மின்கம்பியைத் தொட்டதில் ஒருவர் பலி - மற்றொருவர் படுகாயம்

May 20, 2024 8:01 AM

விழுப்புரம் நகரை ஒட்டிய விராட்டிக்குப்பத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த வீட்டின்மேல் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த கிஷோர் ராகவ், கிருத்விக் என்ற சிறுவர்கள் தாழ்வாகச் சென்ற மின்கம்பியைத் தொட்டதில் கிஷோர் ராகவ் உயிரிழந்தார்.

கிருத்விக் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதேபோல் சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த மல்லக்கவுண்டனூரில் தெருவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுவன் லிங்கேஸ்வரன், ஊராட்சி குடிநீர் மோட்டாரின் மின்சாரப் பெட்டி அருகே விழுந்த பந்தை எடுக்கச் சென்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

அதில் மின்கசிவு உள்ளதாகப் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.