​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கனமழையால் சந்தன நகர் குளத்தில் உடைப்பு - மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

Published : May 20, 2024 6:23 AM

கனமழையால் சந்தன நகர் குளத்தில் உடைப்பு - மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

May 20, 2024 6:23 AM

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் பகுதியில் பெய்த கனமழையால், சந்தன நகரில் உள்ள குளம் நிரம்பி உடைந்தது. இதனால், நீர்வழித்தடங்கள் மற்றும் விவசாய நிலங்கள் வழியே வெளியேறி வரும் வெள்ள நீர், குடியிருப்புகளில் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள காவல் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள், மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.