​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கனிமவளம் ஏற்றிச் சென்ற லாரிகளை சிறைபிடித்த கிராம மக்கள்

Published : May 19, 2024 6:22 PM

கனிமவளம் ஏற்றிச் சென்ற லாரிகளை சிறைபிடித்த கிராம மக்கள்

May 19, 2024 6:22 PM

அதிகபாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளால் சாலைகள் சேதமடைவதோடு, விபத்து அபாயம் இருப்பதாகக் கூறி தென்காசி மாவட்டம் தீர்த்தாரப்ப புரம் கிராமச் சாலை வழியாக கேரளாவிற்கு கனிமவளம் ஏற்றிச் சென்ற 20 லாரிகளை அப்பகுதியினர் சிறைபிடித்தனர்.

தகவலறிந்து தி.மு.க கொடி கட்டப்பட்ட காரில் வந்த சிலருக்கும் கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் இருதரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற கடையம் போலீஸார், சிறைபிடிக்கப்பட்டிருந்த லாரிகளை காவல் நிலையத்திற்கு கொண்டுச் சென்றனர்.