​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தலைமறைவாக இருந்த ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குநர் ரூசோ கைது

Published : May 19, 2024 4:20 PM

தலைமறைவாக இருந்த ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குநர் ரூசோ கைது

May 19, 2024 4:20 PM

2,438 கோடி ரூபாய் மோசடி வழக்கில் ஜாமீனில் வெளிவந்து தலைமறைவான ஆருத்ரா கோல்டு டிரேடிங் இயக்குநர் ரூசோ மற்றும் வழக்கில் தொடர்புடைய தம்பதியரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

கைதான அருண் குமார் அவரது மனைவி ஜெனோவா ஆகியோர் ஆவடியில் ஆருத்ராவின் கிளை நிறுவனத்தை தொடங்கி சுமார் 8000 பேரிடம் 134 கோடி ரூபாய் வரை பெற்று மோசடி செய்திருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

அவர்களின் 2 சொத்துகள் கண்டறியப்பட்டிருப்பதாகவும், 5 வங்கி கணக்குகளை முடக்கியிருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.