​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சொத்து வழக்கை முடித்து தருவதாக கூறி விவசாயிடம் ரூ.27 லட்சம் மோசடி

Published : May 19, 2024 7:10 AM

சொத்து வழக்கை முடித்து தருவதாக கூறி விவசாயிடம் ரூ.27 லட்சம் மோசடி

May 19, 2024 7:10 AM

ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த விவசாயி இளங்கோவனிடம், ஐஏஎஸ் அதிகாரி என்று கூறி அறிமுகமான, சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஆனந்த் வைஷ்ணவ் என்பவர், சொத்து வழக்கை முடித்துத் தருவதாக கூறி 27 லட்சம் ரூபாயை பெற்று மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார்.

இளங்கோவனிடம் இருந்து  பல தவணைகளில்  27 லட்சம் ரூபாயை ஆனந்த் வைஷ்ணவ் பெற்ற நிலையில், வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், கொடுத்த பணத்தை இளங்கோவன் திருப்பிக் கேட்டுள்ளார்.

ஆனால்,ஆனந்த் வைஷ்ணவ்  பணத்தை திருப்பிக் கொடுக்காததால், இளங்கோவன், மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். விசாரணைக்குப் பின்னர் போலி ஐஏஎஸ் அதிகாரி ஆனந்த் வைஷ்ணவை போலீசார் கைது செய்தனர்.