​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதுச்சேரி மற்றும் காரைக்கால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் - மீன்வளத்துறை

Published : May 19, 2024 6:27 AM

புதுச்சேரி மற்றும் காரைக்கால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் - மீன்வளத்துறை

May 19, 2024 6:27 AM

தென்கிழக்கு வங்கக்கடலில் மே 22-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்ற வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கையில், மே 21 மற்றும் 22ஆம் தேதிகளில் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும் என்ற எச்சரிக்கை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.